Breaking News

தேவரியம்பாக்கத்தில் கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம், ஆக.24:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தில் சனிக்கிழமை ஊராட்சி முன்னேற்றக் குறியீடு தொடர்பான சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அவ்வூராட்சி மன்ற தலைவர் மா.த.அஜய்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

கடந்த நிதியாண்டுக்கான தரவுகளை பரிசீலித்து ஊராட்சியின் வளர்ச்சி குறித்த பல்வேறு நிலைகளை மதிப்பிடும் நோக்கில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.கிராம மக்களின் பங்களிப்புடன் பல்வேறு அரசுத்துறைகளின் பங்களிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. 

வேளாண்மை,கால்நடை,சுகாதாரம், நுகர்வோர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், காவல்துறை,நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகள் குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது.

ஏழ்மை ஒழிப்பு, ஆரோக்கியம்,குழந்தைகள் நலன், நீர்வளம், சுத்தமும் பசுமையும், சிறந்த நிர்வாகம், பெண்கள் முன்னேற்றம் ஆகியனவற்றில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 58.5 சதவிகிதமாகவும், 2024 ஆம் ஆண்டில் 95 சதவிகிதமாகவும் ஊராட்சி முன்னேறியுள்ளது.

இச்சிறப்புக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சிப்பிரிவு பயிற்றுநர் அரவிந்தன் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments