முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 12 வரை
வேலூர் :
போட்டிகளின் விவரங்கள் கீழ்க்கண்டவாறு :.
26.08.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான - தடகளம் போட்டிகள் நடைபெறும்.
28.08.2025 அன்று கல்லூரி மாணவியர்களுக்கான - தடகளம் போட்டிகள் நடைபெறும்.
29.08.2025 அன்று கல்லூரி மாணவியர்களுக்கான - இறகு பந்து, கால்பந்து, மேசை பந்து, சதுரங்கம், பூ பந்து, நீச்சல், கூடைபந்து மற்றும் கையுந்து பந்து.
30,08,2025 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம் 100மீ, குண்டு எறிதல் மற்றும் குழுப் போட்டிகள் - இறகு பந்து, மேசை பந்து, கையுந்து பந்து, எறிபந்து, கபாடி, மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறும்.
31.08.2025 அன்று பொது பிரிவினருக்கான போட்டிகள் - தடகளம், கேரம், கபாடி, கையுந்து பந்து., கால்பந்து, சிலம்பம், இறகு பந்து (ம) கிரிகெட்
01.09.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கு - தடகளம் போட்டிகள் நடைபெறும்.
04.09.2025 அன்று கல்லூரி மாணவிகளுக்கான - வளைகோல்பந்து, கபாடி, கைப்பந்து, கேரம், சிலம்பம் மற்றும் கிரிக்கெட்
06.09.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான - இறகு பந்து, கால்பந்து, மேசை பந்து, சதுரங்கம், பூ பந்து, நீச்சல், கூடைபந்து மற்றும் கையுந்து பந்து
07.09,2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான - வளைகோல்பந்து, கபாடி, கைப்பந்து, கேரம், சிலம்பம் மற்றும் கிரிகெட்
08.09.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான - இறகு பந்து, கால்பந்து, மேசைப்பந்து, சதுரங்கம், கோ-கோ, நீச்சல், கூடைப்பந்து மற்றும் கையுந்துபந்து
09.09.2025 அன்று பள்ளி மாணவிகளுக்கான - இறகு பந்து, கால்பந்து, மேசைப்பந்து, சதுரங்கம், கோ-கோ. நீச்சல், கூடைபந்து மற்றும் கையுந்துபந்து
10,09,2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான - வளைகோல்பந்து, கபாடி, கைப்பந்து, கேரம், சிலம்பம் மற்றும் கிரிக்கெட்.
11,09,2025 அன்று பள்ளி மாணவிகளுக்கான - தடகளம், வளைகோல்பந்து, கபாடி, கைப்பந்து, கேரம், சிலம்பம் மற்றும் கிரிக்கெட்.
12.09.2025 அன்று அரசு ஊழியர்களுக்கான (ஆண்கள் / பெண்கள்) இருபாலருக்கான போட்டிகள் - தடகளம், சதுரங்கம், கையுந்து பந்து, கேரம், இறகு பந்து மற்றும் கபாடி.
அனைத்து பிரிவினரும் போட்டி நடைபெறும் நாள் அன்று காலை 8,00 மணி முதல் 9,00 மணி வரை போட்டி நடைபெறுமிடத்தில் - கீழ்கண்ட ஆவணங்கள் கண்டிப்பாக கொண்டு வந்து பதிவு சரிபார்த்துக் கொள்ள வேண்டப்படுகிறது.
பள்ளி மற்றம் கல்லூரி - மாணவ / மாணவியர்கள் கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் 1) மின்னஞ்சல் மூலம் பதிவு செய்த ஆவணம் 2) ஆதார் 3) பள்ளி / கல்லூரி - உண்மை சான்றிதழ் (Bonafide Certificate)
பொது மக்கள் - 1) மின்னஞ்சல் மூலம் பதிவு செய்த ஆவணம் 2) ஆதார் அட்டை 3) குடும்ப அட்டை
மேற்கண்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 8,00 மணி முதல் 9,00 மணிக்குள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும்,
இதில் கூடைப்பந்து மற்றும் கையுந்துபந்து - வி.ஐ.டி. விளையாட்டு மைதானத்திலும், மற்றும் பள்ளி / கல்லூரி (மாணவ / மாணவியர்கள்) கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் - சி.எம்.சி விளையாட்டு மைதானம் பாகாயத்திலும் பொது பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் - சான்றிதழ் சரிபார்பு மற்றும் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்,
மேற்கண்ட 2025-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் - முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கீழ்கண்டவாறு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
பரிசு விவரம்
4 முதல் பரிசு - ரூ. 3000/- இரண்டாம் பரிசு - ரூ.2000/- மூன்றாம் பரிசு - ரூ.1000/-
மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் போட்டியாளர்கள் மட்டுமே மாநில போட்டிக்கு தேர்ச்சி பெறுவார்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு கீழ்கண்டவாறு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
தனி நபர் போட்டி :-
முதல் பரிசு - ரூ. 100000/-
இரண்டாம் பரிசு - ரூ.75000/-
மூன்றாம் பரிசு - ரூ.50000/-
குழுப்போட்டி (நபர் ஒருவருக்கு) :-
முதல் பரிசு - ரூ. 75000/-,
இரண்டாம் பரிசு - ரூ.50000/- ,
மூன்றாம் பரிசு - ரூ.25000/-

No comments
Thank you for your comments