கந்தர்வக்கோட்டை அருகே துளிர் வாசிப்பு திருவிழா
கந்தர்வகோட்டை, ஆக 28-
ஆகஸ்ட் மாத துளிர் மாத இதழில் ஒலிபெருக்கி அறையாய் மாறும் கண்ணாடி அறை, செயற்கைக் கருப்பை, நம் உணவே நம் உணர்வு, வானில் ஒளி நிகழ்வுகள், காகித கொக்குகள் தூது, ஓசோன் படலத்தில் ஓட்டையா, தானாக கடக்கும் ரோபோட் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் இனியா ,சுபிக்ஷா, ரிதன்யா, முகேஷ், சந்தோஷ், ரிஷிகேஷ், அஸ்வின், வித்யா, தேவதர்ஷினி, ஹரிணி ,ஜீவிதா சத்யஸ்ரீ உள்ளிட்டோர் வாசித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.
புதிய புதிய அறிவியல் செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பேசினார்கள்.
மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வினை எழுத வேண்டும் என்றும் எதிர்காலத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கு சிறப்பாக உதவி புரியும் எனவும், ஒவ்வொரு மாணவரும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விதமாக விஞ்ஞான துளிர் இதழை வாசிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments