Breaking News

காஞ்சிபுரத்தில் மு. கருணாநிதி 7வது நினைவு தினம் அமைதிப்பேரணி மற்றும் மரியாதை நிகழ்வு

 காஞ்சிபுரம், ஆக. 7:

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை அமைதிப்பேரணி மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மு. கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் நினைவு நாளை ஒட்டி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்தரமேரூர் எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவுத்தூண் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி, ரங்கசாமி குளம் வழியாக தி. கே. நம்பி தெருவிலுள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் நிறைவுற்றது.

பேரணி நிறைவுக்கு பின், பவளவிழா மாளிகை முன்பாக அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரணியில் பங்கேற்ற பலரும் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Karunanidhi 7th Memorial Day Rally Kanchipuram 2025

No comments

Thank you for your comments