காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், ஆக.24:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகம்மது பேட்டையில் தன்னார்வ ரத்த தான முகாம் கிளையின் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளையும் இணைந்து நடத்திய இம்முகாமிற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் அன்சாரி, சாகுல்,துணை செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன் அரசு தலைமை மருத்துவமனை.யை தரம் உயர்த்த வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைக்கு நடமாடும் ரத்ததான வாகனம் வாங்க வேண்டும் எனவும் ரத்ததான முகாமை தொடக்கி வைத்து பேசும் போது குறிப்பிட்டார்.




No comments
Thank you for your comments