Breaking News

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இரு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

காஞ்சிபுரம், ஆக.28:

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இரு ஜோடிகளுக்கு இலவச திருமணம் வியாழக்கிழமை நடைபெற்றது.


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை,எழியோருக்கு சீர் வரிசைப் பொருட்களுடன் இலவச திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் 2 ஜோடிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களுடன் இலவசமாக திருமணம் நடைபெற்றது.

நிகழ்வில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் இரு ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள கட்டில், பீரோ, மெத்தை உட்பட 26 வகையான சீர்வரிசைப் பொருட்களை மணமக்களிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக் மற்றும் மணமக்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்கள ஆசிர்வதித்தனர்.

No comments

Thank you for your comments