Breaking News

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூரில் இபிஎஸ் சுற்றுப்பயண பிரச்சாரம் – அனுமதி கோரி அதிமுக மனு

 காஞ்சிபுரம் :

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ மாநிலமெங்கும் நடைபெறும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வரும் 21ம் தேதி பிரச்சாரம் நடைபெற உள்ளது.



இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இந்த பிரச்சாரத்திற்கான அனுமதி கோரி, முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான வி. சோமசுந்தரம் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா. கணேசன் (வாலாஜாபாத்), கே. பழனி (மதனந்தபுரம்) ஆகியோர் முன்னிலையில், அதிமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மனுவை பெற்றுக் கொண்டார்.


EPS Campaign Permission Request Kanchipuram 2025

No comments

Thank you for your comments