Breaking News

காஞ்சிபுரம் இபிஎஸ் வருகையை முன்னிட்டு பாசறை சார்பில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு பகுதியில், அ.இ.அதிமுக பொதுசெயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை ஒட்டி, மாவட்ட பாசறை சார்பில்  விளம்பர ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.




மாவட்ட பாசறை செயலாளர் வி. ஆர். மணிவண்ணன் தலைமையில், மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் முன்னிலையில், அதிமுக இலக்கிய அணி செயலாளர், செய்தி தொடர்பு செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளருமான முனைவர் எஸ். எஸ். வைகைச் செல்வன், ஆட்டோக்களில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டினார்.

நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் (வாலாஜாபாத்) பா. கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் (குண்ணவாக்கம்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாநகர பகுதி செயலாளர்கள் பாலாஜி, ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர்கள் தமிழரசன், ஹேமசந்திரன், ஒன்றிய துணை செயலாளர் விமல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், பிரேம்குமார், ஜோதிலட்சுமி சிவாஜி, வேலரசு, புனிதா சம்பத், மகளிரணி திலகவதி, லட்சுமி, அஜ்ஜிமா, கவிதா கோகிலா, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

AIADMK EPS Visit Kanchipuram Pasara Sticker Campaign 2025

No comments

Thank you for your comments