Breaking News

“போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” உறுதிமொழி விழா - 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள பி.ஏ.வி பள்ளியில் போதை பொருள் இல்லா தமிழ்நாடு, மாநில அளவிலான பெருந்துறை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் இணைய வழியாக, அரசு பள்ளி மற்றும் தனியார் நிறுவன பள்ளிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று, இணைய வழியாக உறுதிமொழி ஏற்றனர். 

பின்னர் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு நாடகங்களை மாணவர்கள் ஒன்றிணைந்து நாடகத்தை அரங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காவல்துறை சரக துணைத் தலைவர் திருமதி. நா.தேவராணி, இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர்,  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்,  காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ. வெற்றிச்செல்வி, அரசு  அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

No comments

Thank you for your comments