Breaking News

பள்ளியில் மேல்கூரை பூச்சுப் பெயர்ந்து கீழே விழுந்ததில் தமிழ் ஆசிரியர் காயம்

பள்ளியில் மேல்கூரை பூச்சுப் பெயர்ந்து கீழே விழுந்ததில் தமிழ் ஆசிரியர் காயம்

வகுப்பறையில் மாணவர்கள் இருந்ததால் நல்வாய்ப்பாக தப்பினர்


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்டபுரம் பகுதியில் இயங்கும் டாக்டர்.பி.எஸ் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

மாநகராட்சிக்கு இயங்கும் இந்த பள்ளி 68 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் அவ்வப்பொழுது மேல் குறையிலிருந்து பூச்சி கீழே விழுந்து விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது, 

இந்நிலையில் இன்று பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது கீழ் தளத்தில் உள்ள மேல்கூரை பூச்சு பெயர்ந்து கீழே விழுந்ததில் அவ்வழியாக சென்ற தமிழ் ஆசிரியர் ரமேஷ் என்பவர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, 

பள்ளி நடைபெற்றிருக்கும் நேரத்தில் நடந்ததால் நல்வாய்ப்பாக அவ்வழியே பள்ளி மாணவர்கள் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பலமுறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் புதுப்பிக்கும் பணி நடைபெறாமல் இருப்பதால் அப்பொழுது விபத்து ஏற்படுகிறது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.

No comments

Thank you for your comments