Breaking News

தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் பள்ளி மாணவி தேர்வு

காஞ்சிபுரம், ஆக.31:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வர்ஷிகா தேசிய ஹேண்ட் பால் போட்டியில் விளையாட தேர்வாகி இருப்பதாக அப்பள்ளியின் தாளாளர் அஜய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வர்ஷிகா.இவர் தெலுங்கானா மாநிலம் ஹதராபாத்தில் இம்மாதம் (செப்.26 முதல் செப்.29 வரை) நடைபெறவுள்ள 17 வது தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்று விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் வெளியிட்ட அணித்தேர்வு பட்டியலில் அகத்தியா பள்ளி மாணவி இடம் பெற்றிருப்பதாக அப்பள்ளியின் தாளாளர் அஜய்குமார் தெரிவித்தார்.

மாணவியின் கடின உழைப்பும்,பயிற்சியாளர்களின் அர்ப்புணிப்புமே வர்ஷிகாவின் முன்னேற்றமாக அமைந்துள்ளது.

இவர் தேசிய அளவிலான போட்டியிலும் வென்று தமிழகத்துக்கும்,காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்ப்பார் என்றார் அஜய்குமார்.

No comments

Thank you for your comments