Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம்




காஞ்சிபுரம்  :

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கலந்து கொண்டோருக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments