ஸ்ரீ நாராயண குரு 171வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நாராயண குரு ஸ்போர்ட்ஸ் மீட்...!
துவக்க விழாவில் கோயம்புத்தூர் கால்பந்து சங்கம் செயலாளர் என்.பி.அனில்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு தின உரையை நிகழ்த்தினார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.பொது கன்வீனர் என்.மோகனன் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
இது குறித்து மிஷன் பொது செயலாளர் டி.எஸ்.ஹரீஸ்குமார் கூறுகையில்
ஸ்ரீ நாராயண குரு 171 வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் மீட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகின்றோம் 800கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் .மேலும் கோயம்புத்தூர் கால்பந்து சங்க செயலாளர் அனில்குமார் வருகை புரிந்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்
அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
No comments
Thank you for your comments