Breaking News

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் - நாளை (22.07.2025) நடைபெறும் இடங்கள்

காஞ்சிபுரம், ஜூலை 21-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன் படி, ”உங்களுடன் ஸ்டாலின்" என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

 

 இதில் முதற்கட்டமாக ஜூலை 15.07.2025 முதல் ஆகஸ்ட் 14.08.2025 வரை நகர்ப்புற பகுதிகளில் 25 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 53 முகாம்களும் ஆக மொத்தம் 78 முகாம்கள் நடைபெறவுள்ளது. 

முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ”உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முகாம் நடைபெறும் இடங்கள் 

அதன்படி,  நாளை (22.07.2025)  காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட  

  • தொண்டை மண்டல சைவ வேளாளர் சத்திரம், 
  • மாங்காடு நகராட்சி Step Stones - Maruthi Enclave,  
  • வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட DBL மஹால், 
  • குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஸ்ரீதாமரை கன்னியம்மன் டிரஸ்ட் மண்டபம், 
  • மற்றும் குன்றத்தூர் கொளப்பாக்கம் ஊராட்சி சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாம்களின் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.                   


வெளியீடு:: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments