கூட்டுறவுத்துறையில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீர்வுத் திட்டம் – இணைப்பதிவாளர் அறிவிப்பு
காஞ்சிபுரம், ஜூலை 27:
இத்திட்டம், 31.12.2022 தேதி வரையிலான முற்றிலும் தவணை தவறிய பண்ணை சாராக், சிறு வணிக, தொழில் வணிக, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு வகை கடன்களுக்கு பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ்:
- கடந்த 12.09.2023 ஆம் தேதிக்கு முன்பு 25% தொகையை செலுத்தி ஒப்பந்தம் செய்யாதவர்களும்,
- 25% செலுத்தி இருந்தும் 75% தொகையை செலுத்தாதவர்களும்
மொத்த நிலுவைத்தொகைக்கு 9% சாதாரண வட்டி செலுத்தி, ஒரே தவணையில் கடனை முழுமையாக தீர்வு செய்யலாம்.
மேலும், இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ்:
- 31.12.2022 வரையில் முற்றிலும் தவணை தவறிய கடன்கள்
- 9% சாதாரண வட்டியுடன், 23.09.2025க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்யலாம்.
இந்த திட்டத்தில்:
- கூடுதல் வட்டி
- அபராத வட்டி
- இதர செலவுகள்
முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
கடனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கடனை குறைந்த வட்டி விகிதத்தில் முடித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Label: Special Settlement Scheme for Overdue Cooperative Loans in Kanchipuram

No comments
Thank you for your comments