காஞ்சிபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – மேயர் மற்றும் எம்எல்ஏ எழிலரசன் தொடக்க விழாவில் பங்கேற்பு
காஞ்சிபுரம் :
இதில் முதற்கட்டமாக ஜூலை இன்று முதல் (15.07.2025) ஆகஸ்ட் 14.08.2025 வரை நகர்ப்புற பகுதிகளில் 25 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 53 முகாம்களும் ஆக மொத்தம் 78 முகாம்கள் நடைபெற்றது .இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது .
இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் / சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்கள்.
மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ”உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து அரசு திட்டங்கள் மக்களின் இல்லத்திற்கே சென்று சேரும் ”உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அதைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் காஞ்சிபுரம் கோகுலம் சத்திரம் பகுதியில் முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
#UngaludanStalin #KanchipuramEvents #TNGovtWelfareSchemes #KalaignarMagalirUrimai #PublicWelfareCamps #TamilNaduGovernment
No comments
Thank you for your comments