Breaking News

வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாட்டம்...!




தமிழ்நாட்டில் காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றியர் நமது காமராஜர். மதிய உணவு திட்டம், கட்டாய கல்வி, இலவச சீருடை, பள்ளிகள் தொடங்குவது என தமிழ்நாட்டில் கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர். ஏழை மக்களின் நாயகன், இந்தியாவின் கிங் மேக்கர், தமிழ்நாட்டின் கல்வியின் தந்தை, பெருந்தலைவர், கர்மவீரர், பச்சை தமிழன் என நட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



தொடர்ந்து காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வியாபாரிகள்சங்க பேரவையின் சார்பில் மாநில தலைவர் முத்துக்குமார் அண்ணாச்சியின் ஆலோசனைப்படி கோவை வடகோவையில் உள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு கோவை மண்டலத் தலைவர் சுதர்சன் தலைமையில் மாநில துணைத்தலைவர் தங்கசாமி மண்டல செயலாளர், பாலகிருஷ்ணன்,மண்டல பொருளாளர் பெரியசாமி,மண்டல ஒருங்கிணைப்பாளர் இடையற்காடு சி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் கே சி ராஜா,மாநில பொருளாளர் பொன்னுச்சாமி கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



உடன் கிழக்கு மாவட்ட தலைவர் அய்யனார்,கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட தலைவர் ஜெயமுருகன் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மேற்கு மாவட்டம் இளைஞரணி செயலாளர் சூர்யா, மாநகர ஒருங்கிணைப்பாளர் நாகராஜ்,பெரியநாயக்கன்பாளையம் கிளை தலைவர் பாபு அய்யாதுரை, கிளைசெயலாளர் பால்சந்த்,சூலூர் ஒன்றியகிளை தலைவர் ஜெபத்துரை கிளை செயலாளர் மணிகண்டன்,கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் ஜான்சன் கடைவீதி கிளைச்செயலாளர் விஜயகுமார்,செல்வபுரம் கிளை செயலாளர் வைரம்,செயல் ஆலோசகர்கள் ராமச்சந்திரன் விஜயகுமார்,மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments