கருப்பு முக்காடு அணிந்து ஓய்வூதியர்கள் ஒப்பாரி போராட்டம் – மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநில குழுவின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கருப்பு ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அவ்வகை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் மாவட்ட தலைவர் தாமஸ் இளங்கோவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஓய்வூதியர்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியின் படி ஓய்வூதியத்தை முறைப்படுத்துதல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான சிறப்பு அகவிலைப்படி வழங்குதல் நீதிபதி வழங்கிய தீர்ப்பினை செயல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பி முழக்கங்கள் செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments