காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அரசு பாலிகிளினிக் காணொலி வழியாக திறப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்குவைப்பு
காஞ்சிபுரம் :
துவக்க விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. ஏழிலரசன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பின்னர், குத்துவிளக்கேற்றி, கர்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டிகள், மற்றும் முதியோருக்கான மருந்துப்பெட்டிகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் பாலிகிளினிக் பிரிவுகளை பார்வையிட்ட ஏழிலரசன், மருத்துவர்களிடம் இருந்து வழங்கப்படும் சிகிச்சை சேவைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
No comments
Thank you for your comments