Breaking News

கோவை புத்தகத் திருவிழா 2025: ஜூலை 18 முதல் 27 வரை கொடிசியா வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள்

 கோயம்புத்தூர், ஜூலை 16:

கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் கொடிசியா தொழில் அமைப்புடன் இணைந்து, 9-வது ஆண்டு “கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025” – ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.



இது தொடர்பாக ஒசூர் சாலையில் அமைந்துள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புத்தகத் திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் முத்துக்குமார், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று விழா குறித்த விபரங்களை தெரிவித்தனர்.

புத்தகத் திருவிழா சிறப்பம்சங்கள்:

  • மூன்று பெரும் அரங்குகளில், 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
  • 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
  • பார்வையாளர்களின் வருகை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்:

  • இலக்கிய நிகழ்ச்சிகள்
  • கவியரங்குகள்
  • கதை சொல்லும் நிகழ்வுகள்
  • பேச்சுப் போட்டிகள்
  • சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகள்

இதனுடன், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் திருவிழாவிற்கு பங்கேற்க, விசேஷமாக பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


#CoimbatoreBookFair #BookFair2025 #KovaiBookFest #Codissia #TamilBookFestival #PuthagaThiruvizha #EducationAndBooks

No comments

Thank you for your comments