Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளி - ஊஞ்சல் சேவையில் திரளான பக்தர்கள் தரிசனம்

 


காஞ்சிபுரம், ஜூலை 25:

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கருகே அமைந்துள்ள ஸ்ரீ ஆதி காமாட்சி, ஆதி பீட பரமேஸ்வரி, காளிகாம்பாள் திருக்கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இந்நாளில், ஆதி பீட பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் முழுமையாக நடைபெற்றன. அடுத்ததாக, அம்மன் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


அம்பாள் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து, பின்னர் திருக்கோவில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி, அதன் பின் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.



இந்த ஊஞ்சல் சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் அருளைப் பெற்றனர். ஆடித் திருநாளின் இந்த ஆன்மிக நிகழ்வை நேரில் கண்டு பக்தர்கள் பகிரங்க மகிழ்ச்சியடைந்தனர்.


Keywords/Labels  : Kanchipuram, Adi Month, Aadi Velli, Sri Adi Kamakshi Temple, Kalikambal Temple, Utsavam, Oonjal Seva, Hindu Festivals, Special Alankaram, Goddess Worship, Devotees Gathering, Tamil Nadu Temples

No comments

Thank you for your comments