Breaking News

போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜூன் 26:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணியை காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

பேரணியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)ஆர். சத்யா, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி ந.ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி,கலால் உதவி ஆணையர் ஆர்.திருவாசகம் ஆகியோர் உட்பட பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறும்,கோஷங்கள் எழுப்பிக் கொண்டே வந்தனர்.

No comments

Thank you for your comments