போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூன் 26:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணியை காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறும்,கோஷங்கள் எழுப்பிக் கொண்டே வந்தனர்.
No comments
Thank you for your comments