Breaking News

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு, மளிகைக் கடைக்காரருக்கு 15 ஆண்டுகள் சிறை - காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம்,  ஜூன் 26:

காஞ்சிபுரத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மளிகைக் கடைக்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவைச் சேர்ந்த ராஜ்மோகன் ராசாத்தி தம்பதியரின் 6 வயது மகளிடம் அதே பகுதியில் உள்ள மளிகைக்கடைக்காரரான சீனிவாசன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் தாயார் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த 26.5.2019 ஆம் தேதி செய்த புகாரின் பேரில் சினிவாசனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவ்வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் வழக்கில் ஆஜரானார். 

வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் சீனிவாசன் குற்றவாளி என் பதை உறுதி செய்தார். 

பின்னர் சீனிவாசனுக்கு போக்சோ வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் ஒராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கிடுமாறும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளி சீனிவாசனுக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினறையும் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் பாராட்டினார்.

No comments

Thank you for your comments