Breaking News

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான நுகர்வோர் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.06.2025) மாவட்ட அளவிலான இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் 2025 முதல்  ஜூன்  2025 வரை)  தன்னார்வ நுகர்வோர் அமைப்புக்கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம்  மற்றும்  விலை கண்காணிப்புக்குழு கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்  தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், நுகர்வோர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்புடைய தகவல்களை  இணையதளத்தில், அறிந்து கொள்வது,  மாவட்டம்,  வட்டம்,  மற்றும் நியாயவிலைக்கடை அளவிலான கண்காணிப்புக்குழு அமைப்பதன் முக்கியத்துவம்  மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் தினசரி விலைப்பட்டியலின்  விவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர்   திரு.மு.பிச்சாண்டி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சி.பாலாஜி, உத்திரமேரூர், பெட்காட், இயக்குநர், திரு.கி.ஜெயராமன், செயலாளர், திரு.சுரேஷ், மற்றும் குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல் – பரணிபுத்தூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், திரு. ஆர்.கே.இரவிச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு. திருவேங்கடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் நுகர்வோர்  பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் திரு.பூஷன் குமார்  மற்றும்  அரசு  அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments