வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் பேரணி, தர்ணா போராட்டம்: 300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்:
திடீர் விடுப்பு – அலுவலகங்கள் வெறிச்சோடல்:
இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு வருவாய் அலுவலகங்கள் செயல்படாமல், பொதுமக்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
அலுவலர்கள் பணியில் இல்லாததால், மக்களின் விண்ணப்பங்கள், வரி, உரிமை சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகள் நடக்காமல் நிலைமை ஏற்பட்டது.
போராட்டத்தின் கோரிக்கைகள்:
- வருவாய் துறையினர் உரிய பாதுகாப்பு மற்றும் உரிமைகளை கோரிக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்:
- களப்பணியில் ஈடுபடும் வருவாய் துறையினர் மீதான தாக்குதல் தடுக்கும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
- பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும்.
- குறைந்த ஊதியத்தில் அதிக பணிச்சுமையை வகித்து வரும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
- பணியின் பாதுகாப்பு, உரிமை, மற்றும் அங்கீகாரம் தேவை.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 300-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள காவலான் கேட் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளும் கண்டன கோஷங்களும் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய் துறையினர் தீடிர் தற்செயல் விடுப்பு எடுத்ததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருவாய் துறை ஊழியர்கள் அமைதியான முறையில் தங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக குரல் கொடுத்தனர்.
No comments
Thank you for your comments