Breaking News

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரான்ட் மற்றும் பசுமை இந்தியா தன்னார்வல அமைப்பு இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, செவிலிமேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரான்ட் மற்றும் பசுமை இந்தியா தன்னார்வல அமைப்பு இணைந்து 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அப்பள்ளி  வளாகத்தில் நட்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம்  சட்டமன்ற உறுப்பினர் Rtn.C.V.M.P. எழிலரசன் அவர்களும், காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர்  திருமதி.வெற்றிச்செல்வி அவர்களும், ரோட்டரி மாவட்டத்தின் 3231 இன் தொழில் பணி இயக்குனர் Rtn. முருகேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் இவ்விழாவின் ஏற்பாட்டை Rtn. மேகநாதன் அவர்கள் சிறப்பாக  செய்திருந்தார், மேலும் இவ்விழா இருக்கு காஞ்சி அன்னை சத்திரம் நிறுவனர் திரு.மோகன், காஞ்சி சர்வம் அறக்கட்டளை நிறுவனர் திரு.பன்னீர்செல்வம், பள்ளியின் முதன்மை ஆசிரியர், மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்



 விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றியும், பிளாஸ்டிக் பொருட்களின் சுழற்சி முறையைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்

No comments

Thank you for your comments