Breaking News

பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் ஊராட்சி தூய்மை பணியாளர்களை சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்ச்சி ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்

காஞ்சிபுரம், ஜூன்.16-

வாலாஜாபாத் அருகே பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் ஊராட்சி தூய்மை பணியாளர்களை சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் பள்ளி ஆசிரியர்.



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா அங்கம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

பள்ளியில்  தூய்மை பணி மேற்கொள்ள தனியாக ஆள் இல்லாத நிலையில், கிராம ஊராட்சியில் துய்மை பணியை மேற்கொள்ளும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களின் பணிச்சுமைக்கு இடையே தன்னலம் பராமல் பள்ளி வளாகத்தை நாள் தோறும் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி, நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் சேகர், தூய்மைப் பணியாளர்கள் ஆசையே கேட்டறிந்து, நேற்று தனது சொந்த செலவில் உணவு மற்றும் வாகனம் ஏற்பாடு செய்து ஒரு நாள் சுற்றுலாவாக மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்று ஐந்து ரதம்,கடற்கரை கோவில், ஒற்றை உருண்டை பாறை, கடற்கரை, தல சயன பெருமாள் கோவில், உள்ளிட்டவற்றை பார்வையிட வைத்தார்.

மேலும் முட்டுக்காடு படகு குழாமில் படகு சவாரிக்கு  ஏற்பாடு செய்தார்.  சுற்றுலா சென்று வந்ததால் மகிழ்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்களும், அங்கம்பாக்கம் கிராம மக்களும், பள்ளி ஆசிரியரின் செய்கையை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments