காஞ்சிபுரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்-3054 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்!
காஞ்சிபுரம்:
முகாம் ரோட்டரி மாவட்ட தொழில் பணி இயக்குனர் திரு. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி, மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜன் பாபு பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உரையாற்றும்போது,
வேலை வாய்ப்பை பெற வேண்டுமென்றால் முதலில் அதற்கான முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும், அந்தவகையில் அவ்முயற்சியாக இம் முகாமில் பங்கெடுத்துள்ள வேலை வாய்ப்பை நாடுபவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் பேசினார்.
முகாமில் அப்போலோ பார்மஸி, டி.வி.எஸ்,எச்.டி.பி பினான்ஸியல் சர்வீசஸ், முத்தூட் பைனாஸ், ஸ்ரீராம் பைனாஸ், ஐ.எஃப்.பி.அப்பளைன்ஸ், ரானே மெட்ராஸ், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், பேங்க் பசார் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட சுமார்4526 நபர்களில் சுமார் 3054 நபர்களுக்கு வேலை கிடைக்கப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள்,தனியார் நிறுவன மனித வள மேம்பாட்டு துறையினர் என பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments