ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்..!
கோவை பால்கம்பனி பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம். இவ்விழாவில் பள்ளியின் தலைவர் மஹாவீர் போத்ரா, துணைத் தலைவர் கமலேஷ் ஜி பாப்னா, செயலாளர் கோபால் புராடியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் முதல்வர் ஸ்ரீமதி.பங்கஜ் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக யோகா பயிற்றுநர் கிஷோர் ஜெயின் மற்றும் அவருடைய குழு ஆகியோர் கலந்து கொண்டு புஜங்காசனம், வஜ்ராசனம் போன்ற பல ஆசனங்களை பயிற்றுவித்து ஆரோக்கிய வாழ்விற்கு யோகா அவசியம் என்பது குறித்தும், உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஒவ்வொரு ஆசனமாகக் கூறி யோகா பயிற்றுவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவியர்கள் யோகா பயிற்சியில் சுமார் 1 - மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்து அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி குறித்து முதல்வர் கூறுகையில் எங்களது பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றோம். யோகா என்பது ஒரு கலைமட்டுமல்ல அது ஒரு வரம் எனவே அனைவரும் தினந்தோறும் யோகா செய்யவேண்டும். மேலும் உணவுப் பழக்கங்களால் ஏற்படும் பல உடல் உபாதைகள் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியமாக செயல்படும். எங்களது பள்ளியில் விளையாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை யோகாவிற்கும் வழங்குகிறோம்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் யோகா பயிற்சாயாளர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments