Breaking News

எஸ்பிஓஏ பள்ளி மாணவ மாணவியர்கள் யோகா விளக்க பயிற்சி..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை சொக்கம்புதூர் எஸ்பிஓஏ பள்ளி மாணவ மாணவியர்கள் யோகா விளக்க பயிற்சிபள்ளி தாளாளர் எம்.முருகேசன் , தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் சபுரல் பானு இப்ராஹிம், முன்னால் மாணவி அறம் அசோகன், கட்டட பொறியாளர், DLF Ltd.,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 200கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் யோகாசனம் பயிற்சியை மேற்கொண்டனர்.பின்னர் பள்ளி தாளாளர் எம்.முருகேசன், முதல்வர் சபுரல் பானு இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறுகையில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 



இந்தியாவில் பிரதமர் மோடி துவக்கி வைத்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் தமிழ்நாட்டிலும் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, மன அமைதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகும்.மேலும் அன்பையும் அமைதியையும் போதிக்கும் இப்பயிற்சியை உலகம் முழுவதும் எடுத்துச்செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.எங்களது பள்ளியில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது போல் யோகாவிற்கும் முக்கியத்துவம் அளித்து குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.



மேலும் அனைத்து வயதினரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினர். எங்களது பள்ளி மாணவ மாணவியர்கள் ஜோஸ்விகா (வகுப்பு V) தன்ஷிகா(வகுப்பு III) இந்தோனேஷியாவில் முதலாவது காமன்வெல்த் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று கூறினர்.இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments