பொறியியல் தர வரிசைப்பட்டியலில் காஞ்சிபுரம் மாணவி மாநில அளவில் முதலிடம்
காஞ்சிபுரம், ஜூன் 27:
இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்தேர்வில் காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தணிக்கைத்துறையில் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஜெயவேல் மற்றும் கூட்டுறவுத்துறையில் சார்பதிவாளராக பணியாற்றும் அருணா ஆகியோரின் மகள் சகஸ்ரா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி சகஸ்ரா கூறுகையில் பிளஸ் 2 தேர்விலும் 599 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 2 வது இடத்தையும்,மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றேன்.
தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பேன் என நினைக்கவில்லை.அண்ணா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். பொறியியல் படிப்பை முடித்த பின்னர் ஐஏஎஸ் அதிகாரி தேர்விலும் தேர்ச்சி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments