Breaking News

ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழாவில் அறுசுவை உணவளிப்பு -காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாநகராட்சி துணை மேயர் திரு குமரகுருநாதன் அவர்களின் ஏற்பாட்டில், இளம் தலைவர் மற்றும் வருங்கால பாரதப் பிரதமர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


🎉 விழாவின் ஒரு பகுதியாக, காந்தி சாலை முழுவதும் காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்பட்டு, கர்மவீரர் காமராஜர் திருவருட் சிலைக்கு பிரமாண்டமான மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கொடி ஏற்றிவைத்து பிறந்த நாள் விழா நடைபெற்றது.

🎤 மாநகரத் தலைவர் திரு நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த அறுசுவை உணவு வழங்கும் செயல்பாடு மாநகராட்சி துணை மேயர் திரு குமரகுருநாதன் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

👥 விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி.வி. மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி விழாவை சிறப்பித்தார்.

பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்:

இதில் மாநில பொது குழு உறுப்பினர்கள் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குரு ராஜ் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமங்கலி சீனிவாசன். நூல் கடை ராதாகிருஷ்ணன்இ மகேந்திரன் .eb அஜி வட்டாரத் தலைவர்கள் முருகன் என்கின்ற  யூதா .அம்பி பிச்சாண்டி. முன்னாள் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வஜ்ரவேல். இஷ்டலிங்கம். மாநகர பகுதி தலைவர்கள் சப்தகிரி. காஞ்சி காமராஜ். பார்த்தசாரதி. பட்டு காமராஜ். லோகநாதன் செவிலிமேடு பிரபு தென்னேரி சுகுமார் மேட்டுக்குப்பம் சரவணன் கந்தசாமி வழக்கறிஞர் உஷா. குமார். உள்ளிட்ட மாவட்ட மாநகர வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments