Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 29 லட்சம் மதிப்பீட்டில் புதிய டென்னிஸ் கோர்ட் மைதானம் திறப்பு - அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி,ஆர் . காந்தி திறந்து வைத்தனர்.

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் அமைத்திருந்த டென்னிஸ் கோர்ட் விளையாட்டு மைதானம் சேதமான நிலையில் புதிய டென்னிஸ் கோர்ட் அமைத்து தர வேண்டும் என விளையாட்டு வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 




டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் நிதியின் கீழ் 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய டென்னிஸ் கோர்ட் மைதானம் அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார்.

இதனை அடுத்து புதிய டென்னிஸ் கோர்ட் மைதானம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய டென்னிஸ் கோர்ட் மைதானத்தை திறந்து வைத்து,  அமைச்சர்கள் டென்னிஸ் விளையாடி விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்குதொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி க. செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் சப் கலெக்டர் ஆஷிக் அலி, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், துணை மேயர் குமரகுருநாதன்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்எஸ். சுகுமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments