கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்:
இம்முகாமில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, அண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினையுறா மாடுகளுக்கு சிகிச்சை, பசுந்தீவன விதைகள் விநியோகம், சுண்டுவாத அறுவை சிகிச்சை, நோய் மாதிரிகள் ஆய்வு செய்தல் போன்ற சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சியினையும் பார்வையிட்டார்கள். தொடர்ந்து கன்றுகளை சிறப்பாக பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும் இம்முகாம்கள் கிராமங்களில் நடத்தப்படுவதால், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் மாநிலத்தின் மூலை முடுக்கிலும் கிடைக்கப் பெறுகின்றன. சமீபத்திய அறிவியல் சம்பந்தமான கால்நடை பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பான அறிவை துறை சார்ந்த வல்லுநர்களால் பொது மக்களிடத்தில் நேரடியாக பகிர்வதன் மூலம் கால்நடைகள் மற்றும் எருமைகளின் கருத்தரிக்கும் திறன் மற்றும் கன்று ஈனும் விகிதத்தை கணிசமாக மேம்படுத்தி கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தி அதன் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பை அதிகரிக்கச் செய்ய வழிவகுக்கிறது.
ஒவ்வொரு முகாம்களிலும் சிறந்த கன்று உரிமையாளர்களுக்கு விருது வழங்குவதால் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். இதன்மூலம் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன என தெரிவிக்கப்பட்டது.
கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்ட தளவராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தெரிவித்ததாவது:
எங்கள் கிராமத்தில் பெரும்பாலான மக்களுக்கு கால்நடைகள் வளர்ப்பது முக்கிய தொழிலாகும். கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கருவூட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்பொழுது அவற்றினை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த சூழ்நிலையில், கிராமத்திலேயே கால்நடை மருத்துவ முகாம் வைப்பதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மட்டுமில்லாமல், கருவூட்டல், குடற்பூழு நீக்கம், தடுப்பூசி ஆகிய அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுவதாலும், முகாமில் கால்நடை வளர்ப்பதில் வல்லுநர்கள் வழங்கப்படும் அறிவுரைகளும், பசுந்தீவன உற்பத்தி குறித்த செயல்முறை விளக்கம் பற்றியும் அறிந்து கொள்ளுவதற்கும் பயனுள்ளதாக அமைகின்றன.
எனவே இம்முகாமின் மூலம் கால்நடை வளர்க்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் கிராமத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.கே.சங்கர், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.ம.திருமாறன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments