எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வியாண்டிற்கான பொறுப்பு மாணவர் பதவி யேற்பு விழா& சிறப்புத் துணைப்பாடச் செயல்பாடுகளுக்கான துவக்க விழா...!
கோவை சொக்கம்புதூரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025-26 ஆம் கல்வியாண் டிற்கான பொறுப்பு மாணவர் பதவியேற்பு விழா மற்றும் சிறப்புத்துணைப் பாடச் செயல்பாடுகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும்,தற்பொழுது போக்ரான் ஜெய்சல்மர் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றும் ''லெப்டினன்ட் கர்னல் எஸ்.ஷ்யாம் சசிதர்" சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி மாணவர் தலைவர்களை பதவியேற்கச் செய்து விழாவை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் தாளாளர் எம்.முருகேசன் விழாவிற்குத் தலைமையுரை வழங்கினார்,பள்ளியின் முதல்வர் சபுரல்பானு இப்ராகிம் வரவேற்புரை நல்கினார்.பாரத ஸ்டேட் வங்கியின் உதவிப் பொது மேலாளர்கள் எஸ்.ஹரி ஹரன்,எஸ்.எல்.அருண்,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர் தலைவர் எம்.அரவிந்த்,உதவி பள்ளி மாணவர் தலைவி எ.ஸ்ரீ சுதர்சனா ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு,விருந்தினர் அறிமுகம் மற்றும் மரியாதை செலுத்துதல்,பதவியேற்பு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மாணவர்களின் பொறுப்பு, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கொண்டாடும் ஓர் அருமையான நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments