Breaking News

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

காஞ்சிபுரம், ஜூன் 29:





சிறுகாவேரிப்பாக்கம் மங்கையர்க்கரசி தெருவைச் சேர்ந்த குமார் (60) என்பவர், தனது இருசக்கர வாகனத்தை பெரியகாஞ்சிபுரம் மேற்குராஜவீதியில் உள்ள நகைக்கடை முன்பாக கடந்த 19.06.2025 அன்று நிறுத்தி விட்டு இருந்துள்ளார்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த தீனபவன் (29) மற்றும் விக்னேஷ் (19) ஆகியோர் அந்த வாகனத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குமார், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments