காஞ்சிபுரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன் கைது
காஞ்சிபுரம், ஜூன் 29:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (38). இவர் கூரம் கிராமத்தில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி ராதிகா (30). இவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். தம்பதிக்கு ரஞ்சித்குமார் (9) என்ற மகனும் உள்ளார்.
தொடர்ந்து குடும்பத்தகராறு ஏற்படுவதுண்டு. 27.06.2025 அன்று ஏற்பட்ட தகராறின் போது, பச்சையப்பன் தனது மனைவியை சுவரில் மோதிக்கொண்டு கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, உயிரிழந்த ராதிகாவின் தந்தை எல்லப்பன் (70) அளித்த புகாரின் பேரில், பொன்னேரிக்கரை காவல் நிலையம் போலீஸார் பச்சையப்பனை கைது செய்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments