Breaking News

திமுக சட்டத்துறை சார்பில் சட்டமன்றத் தேர்தல் பயிற்சி பாசறைக் கூட்டம்

காஞ்சிபுரம்:

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சட்டத்துறை சார்பாக,  பயிற்சி பாசறை கூட்டம் காஞ்சிபுரம் அருகே உள்ள எம்.எம். லெகஸி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் DLC, CLC, ULC, TLC, DivLC, FLC போன்ற சட்டதுறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னணி வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்றன.

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற பயிற்சி பாசறைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் தனது உரையில், வரவிருக்கும் தேர்தல் பணிகளில் வழக்கறிஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், சட்டத் துறை உறுப்பினர்கள் உரிய சட்ட விளக்கங்களையும் தேர்தல் விதிமுறைகளையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியல், மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்கு பதிவு,வாக்கு எண்ணிக்கை, வாக்காளர்கள், தபால் வாக்காளர்கள் உள்ளிட்டவை குறித்து தொடுதிரை மூலம் செயல்விளக்கம் அளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் காஞ்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டத்துறை இணை செயலாளர்கள்,தொகுதி பார்வையாளர்கள்,

வழக்கறிஞர் அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம், சட்ட துறையின் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், வரவிருக்கும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக சட்ட ரீதியான தயாரிப்புகளை உறுதிப்படுத்தவும் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.

No comments

Thank you for your comments