Breaking News

சிறப்பாக கொடி நாள் நிதி வசூல் செய்த காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.நாகராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பாஸ்கரன் ஆகியோர்களுக்கு பதக்கம்

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  முன்னாள்  படைவீரர் நலத்துறை சார்பில், இன்று (13.06.2025) முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சிறப்பாக கொடி நாள் நிதி வசூல் செய்த காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பி.நாகராஜன் மற்றும் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்  திரு.எம்.பாஸ்கரன் ஆகியோர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் திரு சீனிவாசன்,அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.


 

No comments

Thank you for your comments