மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (13.06.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலருடன் கலந்துக்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர். மனுவில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வேண்டியும், செயற்கை கை மற்றும் கால்கள் வேண்டியும், மூன்று சக்கரவண்டி, வீட்டுமனைப் பட்டா, காதொலி கருவி, திறன்பேசிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் மற்றும் சொந்த தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகள் கோரி சுமார் 200 மனுக்கள் பெறப்பட்டன. மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான வசதிகள் செய்து தரும்படி மாற்றுத்திறனாளி அலுவலரிடம் அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், Allison Transmission India Pvt. Ltd., சார்பில், சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 60 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5.40 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி, Allison Transmission India Pvt. Ltd., நிர்வாகிகள் டாக்டர். டாஃபின் ஜோசப், மற்றும் திரு. ஆர்.ஜே,மேகநாதன், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments