மூத்த குடிமக்களுக்கான புதிய கைப்பேசி செயலி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர்’2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான கீழ்க்கண்ட சேவைகள் இடம் பெற்றுள்ளது.
1. அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள்.
2. மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் விவரங்கள்.
3. மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள்.
4. மாற்று மருத்துவமனை விவரங்கள்.
5. மூத்த குடிமக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள்.
6. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள்.
7. மேலும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்திடும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் திறன் பேசியில் (Play Store) வழியாகவோ அல்லது மூத்த குடிமக்களுக்கான வலைதளமான Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in வழியாகவோ பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
இது மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களை ஒரே இடத்தில் பெற உதவுவதுடன், அவர்கள் தேவைகளை நேரடியாக தெரிவிக்கும் ஒரு முக்கியமான முயற்சியாகும்.
No comments
Thank you for your comments