Breaking News

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் ஓய்வு – விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டு

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேளாண்மைத் துறை உயர் அதிகாரி திரு. ராஜ்குமார் அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவரது ஓய்வை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – காஞ்சிபுரம் மாவட்டத்தினர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


திரு. ராஜ்குமார் அவர்கள் தனது சேவையில் நேர்மையும், எளிமையும், மக்கள் நலக்கோட்பாடும் கொண்ட செயல்பாடுகளால் அறியப்பட்டவர். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான பல்வேறு அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும், அவர்களின் நலனுக்காக சுய அர்ப்பணத்துடன் பணியாற்றியவராக இருந்து வந்துள்ளார்.

இவரது பணிநிலையின்போது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்துடன் வலியுறுத்தலின்றி அமைதியாகவும் சிந்தனையோடு பேசக்கூடிய சிறந்த நிர்வாகியாக அறியப்பட்டார். மேலும், மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளராகவும் திகழ்ந்தார்.

“திரு. ராஜ்குமார் அவர்கள் ஓய்வுக்குப் பிறகும் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்” என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு. எம். ஆறுமுகம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டு தெரிவித்தும், “நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க” என வாழ்த்துகள் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments