Breaking News

நீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்படவில்லை – ஜே.பி.எம் ஆட்டோ தொழிற்சாலைக்கு எதிராக வேலை கேட்டு சென்ற தொழிலாளர்கள், தலைவர்கள் கைது!


காஞ்சிபுரம், ஜூன் 10:

ஒரகடத்தில் செயல்படும் ஜே.பி.எம் ஆட்டோ லிமிடெட் தொழிற்சாலையில், தொழில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வேலை வழங்க கோரி தொழிலாளர்கள் முறையிட சென்ற நிலையில், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என மொத்தம் 40 பேரை காவல்துறை கைது செய்தது.


இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை நிர்வாகம் செயல்படுத்தத் தவறியதோடு, காவல்துறையும் தொழிலாளர் உரிமையை ஒதுக்கி,  செயல்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை நிர்வாகத்திற்கு வழங்க கூறி ஜேபிஎம் தொழிற்சாலைக்கு சென்ற தொழிற்சங்கத்தலைவர் இ.முத்துக்குமார், துணைச் செயலாளர் அ.ஜெனிட்டன், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

“நாங்கள் போராட்டமின்றி நிர்வாகத்தை சந்திக்க வந்தோம். காவல்துறை எங்களைக் கைது செய்தது, நிர்வாகத்தின் தொண்டர்களாகவே செயல்படுவது” என்று சிஐடியூ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வல்லக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என சிஐடியூ காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் வலியுறுத்தினார்.

No comments

Thank you for your comments