Breaking News

வேளாளர் வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம்...!

கோவை தி கேரளா கிளப் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  திருச்சியில் நடக்க இருக்கும் சமுதாய மாநில மாநாட்டை முன்னிட்டு, கொங்கு மண்டல சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாநாடு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.மாநில மாநாடு குறித்து பல்வேறு ஆலோசனை மேற்கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



மேலும் கொங்கு மண்டல சிறப்பு ஆலோசனை கூட்டத்தில், திருச்சியில் நடைபெற உள்ள சமுதாய மாநாட்டில் மேற்கொள்ள உள்ள செயல்பாடுகள் குறித்தும், சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் Dr.V.J. செந்தில்பிள்ளை கூறுகையில், திருச்சியில் நடக்க இருக்கும் சமுதாய மாநாடு, அரசியல் சார்பற்ற ஒரு சமுதாயக் கூட்டம் என்றும் தலைவர் என்ற ஒரு நபர் இல்லாமல் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த மாநாட்டை நடத்த இருப்பதாகவும் கூறிய அவர், சமுதாய முன்னேற்றம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து இந்த மாநாட்டை நடத்த இருப்பதாக கூறினார். மேலும், மாநாட்டின் போது சமுதாய முன்னேற்றம் குறித்த கோரிக்கைகளை தீர்மானங்களாக அறிவிக்க இருப்பதாகவும் கூறினார்.ஆலோசனை கூட்டத்திற்கு கோவை மாவட்ட பொருளாளர் காங்கேயம் பாலு பிள்ளை மற்றும் கோவை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் எம்.பி.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலந்து கொண்ட அனைவரையும் கோவை திருமூர்த்தி பிள்ளை வரவேற்று பேசினார்.



இந்நிகழ்வில் குன்னூர் சண்முகசுந்தரம் பிள்ளை,பழனி - P.N. சுந்தரம் பிள்ளை,,குன்னூர் பாலசுப்பிரமனியம் பிள்ளை,, டைமன்பாலுபிள்ளை,, மாணிக்கம்பிள்ளை,மாநில பொருளாளர் மானிக்கம்பிள்ளை,வடக்கு மாவட்டம் தேவர் ராஜதந்திரன் பிள்ளை மேட்டுபாளையம் தலைவர் பராந்தாம சோழன்,நேரு நகர் நந்து,கோவை-நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments