Breaking News

உலக இரத்தக்கொடையாளர் தினத்தில் TNTJ காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தமிழக அரசின் பாராட்டு விருது!

காஞ்சிபுரம் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) – கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இரத்ததான முகாம்கள், விபத்து, பிரசவம், அவசர நிலை சந்திக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் இரத்த சேவைகள் வழங்கி வருகிறது. இந்நலப்பணியில் முதலிடம் வகிக்கும் TNTJ, உலக அளவில் கொண்டாடப்படும் உலக இரத்தக்கொடையாளர்கள் தினம் நிகழ்வில் தமிழக அரசின் பாராட்டைப் பெற்றது என்பது பெருமைக்குரியது.


அரசு விருது வழங்கும் விழா:

அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், TNTJ காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் கிளை சார்பில் இரத்ததான சேவையை அங்கீகரித்து, 9 சேவையாளர்களுக்கு அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

“எல்லாப் புகழும் இறைவனுக்கே” என நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள் நலத்திற்கான உன்னத பங்களிப்பு:

கடந்த 1 ஆண்டுக்குள் மட்டும்,

14 இரத்ததான முகாம்கள்

1411 யூனிட்கள் அவசர இரத்ததானம்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவை

பங்குபற்றியோர்:

TNTJ காஞ்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன் – விருது பெற்றவர்

TNTJ காஞ்சி கிளை மருத்துவரணி செயலாளர் அன்சாரி

TNTJ மாநில பேச்சாளர் உசேன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments