நபார்டு மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் நடத்தும் குறிஞ்சி மேளா 2025 கண்காட்சி..!
கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் நபார்டு மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் சார்பில் கிராமீன் பாரத் மகோத்சவ் குறிஞ்சி மேளா 2025 கண்காட்சி நபார்டு வங்கி தலைமையகம் துணை மேலாண்மை இயக்குனர் அஜய்குமார் சுத் தலைமையில் நடைபெற்றது.
கண்காட்சியினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமை பொது செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சி குறித்து துணை மேலாண்மை இயக்குனர் அஜய்குமார் சுத் மற்றும் தலைமை பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது.
இந்த கண்காட்சியில் 125க்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தி பொருட்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் நபார்டு மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் சார்பில் புவிசார் குறியீடு சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மையமானது புவிசார் குறியீடு பொருட்களுக்கு அங்கீகாரம் மற்றும் செயலாக்கம் குறித்து விவசாயம் துறை சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையமானது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், புத்தொழில் முனைவோர் மற்றும் புவிசார் குறியீடு பொருட்களின் வணிக மையமாகும்.மேலும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் அவிநாசியப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தமது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை மின் வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் வேளாண் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெற்ற ஜல்லிக்கட்டு 4.0 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வருடம் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு 5.0 போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.கண்காட்சியில் சிறப்பை உணர்த்தினார்கள் கலந்து கொண்ட அனைவரையும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மையர் பி.பி. மகேந்திரன் வரவேற்றார். இக்கண்காட்சியில் வேளாண் தொழில் வளர்ச்சி இயக்குனரகம் இயக்குனர் சோமசுந்தரம், கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழ்வேந்தன், ஏற்றுமதியாளர் சுகா குமாரவேல், தொழில் முனைவோர்கள், வங்கிகள், வேளாண் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments