பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் யோகாசனம் செய்தார்...!
கோவை மதுக்கரை பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் யோகாசனம் செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் கனகாசலம் பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வசந்த ராஜன் பள்ளியின் முதல்வர் வனிதா திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார்.பின்னர் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி துவங்கி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் தமிழ்நாட்டிலும் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இதனை எங்கள் பொதுச்செயலாளர் வலியுறுத்துவார். காரணம் மனதளவு அமைதியாக இருக்கும், நோய் தொற்றில் இருந்து விடுபடலாம். போதை கலாச்சாரத்தில் இருந்து விடுபட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல் அனைத்து வயதினரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். போதை கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் 2021 வரை போதை பொருட்கள் புழக்கம் ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அன்று காவல்துறை கடுமையான நடவடிக்கையில் எடுத்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் அதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். 2026ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும்போது இந்த போதை கலாச்சாரம் முழுமையாக தடுக்கப்படும் என தெரிவித்தார்.
யோகா தினத்தை குறித்து பள்ளியின் தாளாளரும் பாஜகவின் பிரமுகர்ரமான வசந்த ராஜன் கூறுகையில் நம் பாரத நாட்டில் பலம்பெரும் கலையான யோகா இந்த உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது அதற்கு முக்கிய காரணம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான்.ஐநா சபையை இந்தியாவின் யோக கலை தான் அமைதியும் அன்பையும் கொடுத்து வருகின்றது எனவே அனைவரும் யோகா பயிற்சியை செய்ய வேண்டும் அனைவரும் அமைதியான அன்பை போதிக்கும் இந்தியாவை உருவாக்க அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் அதிமுக ஈச்சனாரி பகுதி செயலாளர் வேணுகோபால் , பகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார், டிவிசன் செயலாளர் விக்னேஸ்வரன், சதீஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments