Breaking News

கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் வழங்கும் 3வது மற்றும் 4வது அனைத்து இன சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி...!

கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப், 3வது மற்றும் 4வது அனைத்து இன சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சியை கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட்டோரியம் மைதானத்தில் நடத்தியது.



இந்த நிகழ்வு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தூய இன நாய்களை ஒன்றிணைத்து அவற்றின் அழகு, கம்பீரம் மற்றும் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது. இந்த ஆண்டு, 40க்கும் மேற்பட்ட பல்வேறு இன வகைகளில் இருந்து 300க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் கண்காட்சி நடந்தது. 



இந்த நாய் கண்காட்சி ஒரு போட்டியுடன் மட்டுமல்லாமல், பல்வேறு நாய் இனங்கள் துறையில் நிபுணர்களான புகழ்பெற்ற சர்வதேச நடுவர்களால் நுணுக்கமாக நியாயந்தீர்க்கப்படும் ஒரு முதன்மை தளமாகவும் அமைந்தது.இதில் கிருஷ்ணமூர்த்தி, ஷரத் ஷர்மா மற்றும் அஞ்சலி வைத் ஆகியோரை நடுவர்களாக இக்கண்காட்சியை நடத்தினர்.



ஒவ்வொரு நாயும் அதிகாரப்பூர்வ இனத் தரங்களின் அடிப்படையில், அதன் ஒட்டுமொத்த அமைப்பு, கோட், நிறம், அசைவு, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.நாய் இனங்கள் 11 குழு அமைப்புக்கு கீழ் இவற்றில் இருந்து சிறந்த 21 நாய்கள் (வெற்றியாளர் & ரன்னர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

No comments

Thank you for your comments