திருவள்ளுவர் குருகுலம் மற்றும் கிரீன் சக்தி துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடம் மீட்பு
இந்த பள்ளியும் விடுதியும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 'South India Scheduled Tribes Welfare Association' என்பதற்குச் சொந்தமானவை. இது, நரிக்குறவர், இருளர், பைராகி, குடுகுடுப்பைக்காரர், ஆதிதிராவிடர் போன்ற 10க்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழந்தைகளுக்காக நிறுவப்பட்ட இந்தியாவிலேயே முதல் கல்வி நிறுவனமாகக் கருதப்படுகிறது.
இந்த இடத்தில் செயல்பட்ட பள்ளி மற்றும் விடுதியில் படித்த மாணவர்கள் தொடர்ந்து சிறந்த தேர்ச்சி விகிதத்துடன் முன்னேறியுள்ளனர். தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நிதியுதவி பெற்றும் இந்த அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன.
போலி ஆவணங்கள் மூலம் நிலம் துார்கொள்ள முயற்சி:
இதனையடுத்து, திருவள்ளுவர் குருகுலம் 2018 முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், கிரீன் சக்தி துவக்கப்பள்ளி தொடர்ந்து இயங்கி வந்தது.
நீதிமன்ற தீர்ப்பு மூலம் நீதிநிலைப்பு:
2025 மார்ச் 4-ஆம் தேதி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், ராம்குமார் மற்றும் ரெஜினா தேவகி ஆகியோர் தாக்கல் செய்த பட்டா மாற்றம் போலியானது என நிரூபித்து, அவர்களது பெயரில் உள்ள அனைத்து நிலங்களின் பட்டாவையும் ரத்து செய்யும் தீர்ப்பு வழங்கியது.
மேலும், அந்த நிலங்களுக்கு சவுத் இந்தியா ஷெட்யூல்டு ட்ரைப்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் பெயரில் பட்டா மாற்றம் செய்யும் உத்தரவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உத்திரமேரூர் வட்டாட்சியர் ஆகியோர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கை: நிலம் மீட்பு
நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தற்போது பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலம், சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திருமதி ஞானசுந்தரி ரகுபதி, நிர்வாகிகள் ஜெயராமன், ஜீவா, வி. குமரகுருபரன், கமலக்கண்ணன் ஆகியோரால் நேரில் சென்று பூட்டு போட்டு மீட்கப்பட்டது.
மீண்டும் செயல்பட உள்ள குருகுலம் மற்றும் புதிய சேர்க்கை:
இதனால், திருவள்ளுவர் குருகுலம் விடுதி மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது. கிரீன் சக்தி துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சங்கத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments