மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
![]() |
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
![]() |
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 443 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்புலிவனம் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக 10 பயனாளிகளுக்கு ரூ.5,40,000/- மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4,12,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் ரூ.75,000/- ம் மற்றும் 3 சவரன் தங்க நாணயமும் (1 நபருக்கு ரூ.25,000/- மற்றும் ரூ. 72,000/- மதிப்பிலான 1 சவரன் தங்க நாணயம்) மாவட்ட கலெக்டர் வழங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.சீனிவாசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments